2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் சிறுவன் பலி: எழுவர் காயம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்,அப்துல்சலாம் யாசீம்

கந்தளாய் 92ஆவது மைல்கல் பிரதேசத்தில்  இன்று (19)  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் பலியானதுடன்,  7  பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், கொழும்புக்குச் சுற்றுலா சென்றுவிட்டு.  கிண்ணியா நோக்கி வானில்; பயணித்துள்ளனர்.

இதன்போது மேற்படி வான், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த விபத்தில் கிண்ணியாவைச்  சேர்ந்த முஹம்மது அஸ்ரி (வயது 7 ) என்ற சிறுவனே பலியானவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X