2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ் தேவி ரயில் மீது கல்வீச்சு

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மீது, கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை​ பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இத் தாக்குதல் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ரயிலின் முன்கண்ணாடி சேதமைந்துள்ளதுடன் ரயில் சாரதியான டி.எம்.தர்மசேன (வயது 47) காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .