Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 19 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாலித ஆரியவன்ச
பதுளை மாவட்டத்தில் கடந்த 1ஆம் திகதியில் இருந்து 18 ஆம் திகதி வரை, 103 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர் என, பதுளை மாவட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜனிதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 65 பேர், பதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் அவர் கூறினார்.
இப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருப்பர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .