2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குளவி கொட்டி இளைஞன் பலி

Niroshini   / 2017 ஜனவரி 19 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், செ.தி.பெருமாள்

உழவு இயந்திரத்தில் தேயிலை தொழிற்சாலைக்கு சென்றுகொண்டிருந்த இளைஞன் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட ​மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்டன் தோட்டத்தை சேர்ந்த செபமாலை ஸ்டீபன் (வயது 28)  என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒல்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு உழவு இயந்திரத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்றுக்கொண்டிருந்த வேலையில், மரத்திலிருந்த கலைந்து வந்த குளவிகள், இருந்த மூவரை கொட்டியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை மஸ்கெலியா வைதிதியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .