2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ராடா மோசடி வழக்கு வழக்கை நெறிபடுத்த திகதி குறிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 19 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.பாரூக் தாஜுதீன்

ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், எல்.ரீ.ரீ.யின் நிதி சேகரிப்பாளரான எமில் காந்தன், நீதிமன்றில் ஆஜராகாது விடினும் அவருக்கு எதிராக சாட்சியத்தை வழக்குத் தொடுநர் நெறிப்படுத்துவதற்கான தினமாக மார்ச் 17ஆம் திகதியை, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று நிர்ணயித்தது. 

  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று, அவரது வாகனத்துக்குப் பின்னால் பயணித்த மற்றுமொரு வாகனம் தொடர்பான சி.சி.டி.வி கமெரா பதிவு அடங்கிய இறுவெட்டை, கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி ஆராய்வதற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க அனுமதி கோரினார். 

அத்துடன், மாலபேயிலுள்ள சைட்டம் (மருத்துவம் மற்றும் தொழில் நுட்பத்துக்கான தெற்காசிய நிறுவகம்) நிறுவகத்திலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட உடற்பாகங்கள் தொடர்பிலான மரபணுப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர், மன்றில் தெரிவித்தார். 

பிரதான சட்ட வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர மற்றும் ஏனைய இரு சட்ட வைத்திய அதிகாரிகள், தாஜுதீனின் சடலத்தை முறையாக பிரேத பரிசோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், கொழும்பு மருத்துவ சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.  

சி.சி.டி.வி பதிவை கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப அனுமதித்த நீதவான், வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். 

வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று, நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .