2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 20 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ-35 வீதி புளியம்பொக்கணை பகுதியில் மணல் ஏற்றி வந்த லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்ற விபத்தில் எஸ்.முரளிதரன் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.

மாலை 4 மணிக்கு, கிளிநொச்சி கந்தசாமி கோயிலுக்கு முன்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு விட்டு புளியம்பொக்கணை பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போதே, குறித்த விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இதன்போது மணல் ஏற்றி வந்த சாரதி தப்பியோடியுள்ளார்.

சாரதியைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .