2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்சாரத்தை சேமிக்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

Princiya Dixci   / 2017 ஜனவரி 20 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் மின்விளக்குகளை அனைத்து மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனைத்து தனியார் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியுடன் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால், தற்போதிருந்தே மின்சாரத்தைச் சிக்கனமாகப் பாவிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தமது பிரசார செயற்பாடுகளுக்காகப் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் விளம்பரப் பலகைகள் அலங்காரமின் கட்டமைப்புகளுக்காகப் பெருமளவு மின்சாரம் செலவிடப்படுகிறது. அதனை மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பாவனையை கணிசமானளவு சேமிக்க முடியும்.

வரட்சி நீங்கும்வரை மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டத்துக்கு வழங்கும் ஒத்துழைப்பாக இந்த செயற்பாட்டை பின்பற்றுமாறு அனைவரிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X