2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்

Thipaan   / 2017 ஜனவரி 22 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த எம்.சீ.எம். சரீப்,  நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாக அமைச்சின்  செயலாளாரின் சிபாரிசுக்கமைய பொதுச்  சேவை ஆணைக்குழு இந்நியமனத்தை வழங்கியுள்ளது.

தற்போது கிழக்கு மாகாண பேரவை செயலாளராகப் பணி புரிந்து வரும் இவர், கிழக்கு மாகன சபையின் பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராகப் பணி புரிந்துள்ளார். கிண்ணியா, மூதூர், காத்தான்குடி, கோரளைப் பற்று மத்தி ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும் பணி புரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .