2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Arapaima அங்கத்தவர்களுக்கு திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கு வாய்ப்பு

Gavitha   / 2017 ஜனவரி 23 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

NOLIMIT அதன் Arapaima அங்கத்தவர்களுக்காக வருடாந்தம் முன்னெடுக்கும் ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட, 100 அதிர்ஷ்டசாலிகளின் Arapaima அங்கத்தவர்களுக்கு அவர்களின் அன்புக்குரியவர்களுடன் திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கான சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதிகாலை வேளையில் காலியில் ஆரம்பமான இப்பயணத்தில் பங்குபற்றிய Arapaima வெற்றியாளர்கள் உலகின் மிகப் பெரிய பாலூட்டியான திமிங்கிலத்தை மிக அருகில் பார்வையிடும் சந்தர்ப்பத்தை பெற்றனர்.  

ஒவ்வொரு வருடமும் NOLIMITஇன் Arapaima அங்கத்தவர்களால், எதிர்பார்க்கப்படும் இத்திட்டம் மறக்கமுடியாத சிறந்த வெகுமதிகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளிலும் NOLIMIT, வெற்றியீட்டிய Arapaima அங்கத்தவர்களுக்கு Hot Air Balloon சுற்றுலா, முன்னணி ஆடம்பர ஹொட்டல்களில் வார இறுதி நாட்களை செலவிடுவதற்கான வாய்ப்பு, கப்பல் பயணம் மற்றும் மலேசியா, தாய்லாந்து ஆகியவற்றுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் என பலவற்றை வழங்கியுள்ளது.  

தனக்கு இவ்வருடத்தின் சிறப்பம்சமாக திகழ்ந்த இப்பயணம் தொடர்பாக, கொட்டாவையிலிருந்து பங்குபற்றிய ரட்ஸம் ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், “நான் நீண்ட காலமாக NOLIMITஇன் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளதுடன் இச்சீட்டிழுப்பின் வெற்றியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாக காணப்பட்டது. NOLIMIT இல்லையேல் என்னால் இவ்வாறானதொரு மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றிருக்க இயலாது” என்றார்.  

இம்முறை ஊக்குவிப்பு திட்டத்துக்கு Arapaima அங்கத்தவர்களிடமிருந்து பெருமளவு ஆதரவு கிடைக்கப்பெற்றது. 2016ஆம் வருடத்தின் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் அக்டோபர் 31ஆம் திகதி வரையிலான காலத்தில் பெருமளவான வாடிக்கையாளர்கள் இச்சீட்டிழுப்பில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். ரூ. 3000இற்கும் மேற்பட்ட கொள்வனவை மேற்கொண்ட Arapaima அங்கத்தவர்களில் சீட்டிழுப்பின் மூலம், 100 அதிர்ஷ்டசாலி அங்கத்தவர்களும் இவ்வாண்டின் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .