2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிதானமாகச் சொல்லுவதே அழகு!

Princiya Dixci   / 2017 ஜனவரி 24 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வார்த்தையில் சுருக்கம், பேச்சில் நிதானம் இருந்தால் செய்கருமங்கள் சிறக்கும். நிதானமாக என்றும் பேசுபவர்கள் தங்கள் அறிவுக்கு வேலை கொடுத்த பின்னரே, வார்த்தைகளை வெளிவிடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகவே மாட்டாது. 

 

பேசுவதற்கு முன் ஓரிரு வினாடிகளைப் பொறுமையுடன் அடுத்தவர் பேசுவதைச் செவிமடுக்க வேண்டும்.  

அப்புறம் அதற்கான பதிலைச் சட்டெனச் சொல்லாமல், நிதானமாகச் சொல்லுவதே அழகு! அதனையும் மென்மையான தொனியில் சொல்லிவிடுதல் நல்லது.

நல்ல செய்திகளையும் கெட்ட செய்திகளையும் ஒரே தொனியில் பேசுதல் கூடாது. மற்றவர் நிலையறிந்து பேசாதவர்கள் பிறர் கோபத்துக்கும் கேலிக்கும் உள்ளாவார்கள்.  

 

வாழ்வியல் தரிசனம் 24/01/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .