2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐந்து பவுன் நகைகளை திருடியவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 24 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப். முபாரக்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து பவுன் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரை, நேற்றுத் திங்கட்கிழமை (23) மாலை, கைதுசெய்துள்ளதாக,சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். 

ஞாயிற்றுக்கிழமை (22) இரவு, வீடொன்றினுள் புகுந்து தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரைத் தடுத்து வைத்துள்ளதோடு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில், இன்று (24) ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .