2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மைத்திரி, ரணில் ஊழல்வாதிகள் இல்லை: சம்பந்தன்

Kanagaraj   / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியையும், சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன. எனினும், மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும், ஊழல்வாதிகள் இல்லை என்று, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகிறீர்கள். அவ்வாறு பேசிப்பேசியே  மக்களை  நீங்கள் முட்டாளாக்குகின்றீர்களா. ஊழல் பற்றிப் பேசுகின்றீர்கள், அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது நபர் யார், ஒரு நபர் இருக்கிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X