2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோயின் வைத்திருந்த 11 பேர் கைது

Kogilavani   / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 11 பேரை, தியத்தலாவை பொலிஸார், தியத்தலாவை நகரில் வைத்து, இன்றுக் கைதுசெய்துள்ளனர்.

தியத்தலாவை நகரில், இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, மேற்படி 11 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முதலில், 'குடு ராஜா' என்றழைக்கப்படும் நபரையும் மற்றுமொருவரையும்; கைதுசெய்த பொலிஸார் அவர்களிடமிருந்து, 1 கிராம் 452 மில்லிகிராம் ஹெரோயினை  கைப்பற்றினர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே, மேலும் 9 பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .