2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பு வேலி சேதம்; சாரதி கைது

Kogilavani   / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பலாங்கொடை-ஹட்டன் பிரதான வீதி, பொகவந்தலாவை நகருக்கு அருகிலுள்ள பாதுகாப்பு வேலியை, சேதப்படுத்தியக் குற்றச்சாட்டின் பேரில், வானொன்றின் சாரதியை நோர்வூட் பொலிஸார், இன்று கைதுசெய்துள்ளனர்.

மாத்தறையிலிருந்து சிவனொளிபாத மலையக்கு, யாத்திரிகர்களை ஏற்றி வந்த வான், மேற்படி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியது. பாதுகாப்பு வேலி, பலத்த சேதத்துக்குள்ளாகியதைத் தொடர்ந்து, சாரதி வானை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வூட் பொலிஸார், குறித்த வானை மடக்கிப் பிடித்ததுடன், சாரதியையும் கைதுசெய்து, பொகவந்தலாவை பொலிஸில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகவும், அதிகாரசபையின் அறிவித்தலின் பின்னர், சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .