2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

12 ஜோதி லிங்க தரிசனம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில், எதிர்வரும் 24ஆம் திகதி  காலை 9 மணிமுதல் மறுநாள் காலை 9 மணிவரையும் 25, 26, 27அம் திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 9 மணிவரையும்,  பன்னிரு ஜோதி லிங்கங்க தரிசனம் நடைபெறவுள்ளது.

இதனூடாக, பாரதத்தின் வெவ்வேறு மாநிலங்களிலுள்ள மிகவும் மகிமைவாய்ந்த பன்னிரு ஜோதி லிங்கங்களை, ஒரேயிடத்தில் தரிசிக்கும் பாக்கியம் மக்களுக்குக் கிட்டியுள்ளது.

அத்துடன், ஆன்மீகப் படவிளக்கக் கண்காட்சி, மனச் சுமையை இறைவனிடம் கொடுப்பதற்கான ஆன்மீக யாக குண்டம், தியானம் போன்ற நிகழ்வுகளையும், இலங்கை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்வுகள் அனைத்தும், முற்றிலும் இலவசமானது. இன, மத, மொழி பாகுபாடின்றி அனைவரும் சமூகமளிக்கலாம் என ஏற்பாட்டுக்கு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு: 011-2717572, 077-0589359,  077-7712927 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .