2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மிருகங்களைவிட மனிதனே மோசமானவன்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 20 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேட்டையாடுதல் என்பது, மிருகங்கள் தங்கள் உணவுக்காக மட்டும் செய்யும் கருமம் ஆகும். 

ஆனால், மனிதர்கள் செய்யும் வேட்டைகளோ படுபயங்கரமானதும் எல்லைகள் அற்றதுமாகும். அரசியல், தொழில், பணம் என்பவற்றை அடைய, இவர்கள் செய்யும் அடாவடித்தனமான வேட்டை பற்றி இயம்புதல் அரிது.

 இன, மத, மொழியைச் சாட்டாக வைத்துச் செய்யும் யுத்தங்களை, நடத்தும் நாடுகள் செய்யும் அக்கிரமங்களுக்கு என்ன நாமம் சூட்டலாம். 

பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்முறைகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் எல்லாமே பகிரங்கமாக நடந்துகொண்டிருக்கும் வேட்டைகள்தான். 

மிருகங்களைவிட மனிதனே மோசமானவன். இவன் தனது சுயநலனுக்காக எதனையும் செய்வான். அவன் இயற்கையை அழிப்பதற்கு அச்சப்படவேயில்லையே.

இது, கடவுளை மிரட்டும் செயல்போல் இருக்கின்றது.  

வாழ்வியல் தரிசனம் 20/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .