Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் குரல் எழுப்புவதற்கு, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், நாளை (22) காலை காலை 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை ஒன்றுதிரளுமாறு, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
“கேப்பாப்புலவு - பிலக்குடியிருப்பு மக்களின் நிலவிடுவிப்பு போராட்டம், இன்றும் 21ஆவது நாளாகவும் தொடர்ந்தது. புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டமும் தொடர்கின்றது.
“இந்த மக்களுடைய நியாயமான போராட்டத்துக்கு இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
“நல்லாட்சி அரசானது இன்னும் இந்த மக்களுக்கான தீர்வுகளை வழங்கவில்லை. இந்தமக்களின் நிலவிடுவிப்புக்காக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு குரலெழுப்புவோம். வாருங்கள்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .