2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த பெண்ணுக்கு மறியல்

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

கொக்குவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், 25கிராம் கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண்ணை மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் சி.சதீஸ்தரன் இன்று (21) உத்தரவிட்டார்.  

ஞாயிற்றுக்கிழமை, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பெண்ணின் வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான 25கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், 26 வயதுடைய யுவதியும் கைது செய்யப்பட்டிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .