2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

படகு கவிழ்ந்தமை:இன்று முதல் நட்டஈடு

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

களுத்துறை, பயாகல, கட்டுகுருந்த கடலில் யாத்திரிகர்களுடன் படகொன்று கடலுக்குள் மூழ்கியமையால் பலியானவர்களுக்கு, தலா 1 இலட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் நட்டஈடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.  

இதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்றும், இந்த நடைமுறை, இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், நாடாளுமன்றத்தில் நேற்று (21) தெரிவித்தார்.   

களுத்துறை, பயாகல கட்டுகுருந்த கடலில் யாத்திரிகர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (19) பயணித்த, படகுகளில் ஒன்று திடீரென கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கியதனால், பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .