2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

திறப்பைத் திருடியவர் சிக்கினார்

Kogilavani   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா         

பிரதேச சபை செயலாளரின் வீட்டை உடைத்து உட்புகுந்து, பிரதேச சபையின் திறப்புக்கள், பிரதேச சபை தொடர்பான முக்கிய ஆவணங்களை  திருடிச் சென்ற நபரை, புத்தலை பொலிஸார், செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

புத்தலை பிரதேச சபை செயலாளர் பிரியந்தி திசாநாயக்கவின் வீடே, இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.

வீட்டுரிமையாளர்கள் வீட்டில் இல்லாதபோதே, இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிராகாரம் விசாரணைகளை மேற்கொண்ட புத்தலை  பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன்,    திருடப்பட்ட திறப்புக்கள் மற்றும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X