2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம்’

Niroshini   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக, கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர், இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், எதிர்கால தேர்தல்களில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளோம். அதற்கு, எமது கட்சிக்குத் தேவையான பின்புலத்தை உருவாக்கிவிட்டோம்” என்றார். 

“தவிர்க்க முடியாத வெற்றியின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களுடன் நாம் சேரப்போவதில்லை. 

நல்லாட்சியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் மக்கள் ஆதரவை பெறுவதற்காக தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி பேசுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X