2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கர்ப்பிணி கொலை : சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (22) இடம்பெற்றது.

இதன்போது, குறித்த வழக்கில் கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன், மன்றில் சந்தேகநபர்கள் இருவரையும் அடையாளம் காட்டினான்.

இதனையடுத்து, மரபணு பரிசோதனைக்காக, குறித்த நபர்களின் இரத்த மாதிரிகளை, நாளை வியாழக்கிழமை (23) பெற்றுக்கொள்வதற்கு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணியும் 4 வயது சிறுவன் ஒருவரின் தாயான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவருடைய கொலை தொடர்பில், மண்டைதீவு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் சென்ற இருவர் அதே தினத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .