2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டு. காணி சீர்திருத்த ஆணைக்குழுப் பணிப்பாளர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மட்டக்களப்பு  மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுப் பணிப்பாளர் என்.விமல்ராஜ் நேற்று (23) மாலை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுதாவளை கடற்கரை வீதியை அண்டி அமைந்துள்ள மேற்படி  பணிப்பாளர் என்.விமல்ராஜ்ஜின்  வீட்டுக்கு புதன்கிழமை (22) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த இவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,; பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை,  இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவதற்காக  கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு விசேட பொலிஸ் குழு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .