2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தங்க நகைகளுடன் ஒருவர் கைது

George   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணியொருவர், 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இந்த தங்க நகைகள், இந்தியாவின் பெங்களுர் நகரத்துக்கு கொண்டுசெல்லவிருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள், குறித்த தங்க நகைகளை அரசுடமையாக்கியதுடன் சந்தேக நபருக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X