2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிரந்தர கட்டடம் கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2017 மார்ச் 12 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், அல்காசிமி சிட்டி முல்லை ஸ்கீம் கிராமத்தில், நிரந்தர பாலர் பாடசாலைக் கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு கோரி, பிரதேச மக்கள்,   முல்லை ஸ்கீம் தற்காலிக பாலர் பாடசாலைக்கு முன்பாக, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது,“ஏமாற்றாதே ஏமாற்றாதே எம்மை இனியும் ஏமாற்றாதே”, “9 வருடங்கள் ஏமாற்றியது போதும்”, “வெட்கத்தை களைந்து நிற்கிறோம். இனியும் இந்நிலை எமது தம்பி தங்கைகளுக்கு வேண்டாம்” போன்ற பல வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு மாணவர்களும் பெற்றோர்களும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .