2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 19

Menaka Mookandi   / 2017 மார்ச் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1279: யேமன் சமரில் மொங்கோலியர்கள் வென்றதால் சீனாவின் சோங் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.

1915: புளூட்டோ முதல் தடவையாக புகைப்படம் பிடிக்கப்பட்டது. எனினும்  அது ஒரு கிரகமாக அங்கீகரிக்கப்படவில்லை.

1916:8 மெக்ஸிகோ புரட்சித் தளபதி பன்சோ வில்லாவை கைது செய்வதற்காக 8 அமெரிக்க விமானங்கள் கிளம்பின. அமெரிக்க வரலாற்றில் முதல் விமான தாக்குதல் பயணம் இது.

1932: சிட்னி துறைமுக பாலம் திறக்கப்பட்டது.

1944: ஹங்கேரி மீது ஜேர்மனி படையெடுத்தது.

1945: ஜேர்மனியின் தொழிற்சாலைகள், இராணுவ முகாம்கள், கடைகள், போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் உத்தரவிட்டார்.

1945: இரண்டாம் உலகப் போர்- ஜப்பானில் யூ.எஸ்.எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், 800 பேர் கொல்லப்பட்டனர்.

1972: இந்தியாவும் பங்களதேஷும், நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1982: போக்லாந்து போர் - ஆர்ஜெண்டீனியர்கள், தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

1988: இந்திய அரசாங்கத்திடம் நீதி கோரி, உண்ணா நோன்புப் போராட்டத்தை, அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில், ஏப்ரல் 19இல் மரணத்தைத் தழுவினார்.

2002: ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2002: பொதுநலவாய அமைப்பிலிருந்த ஸிம்பாப்வே நீக்கப்பட்டது.

2003: ஈராக்கிற்கு எதிராக யுத்தத்தை ஆரம்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .