2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யுவதிக் கொலை:விசாரணைகள் ஆரம்பம்

Kogilavani   / 2017 மார்ச் 20 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை, யாஹெல்லவத்த பகுதியில் கூரிய ஆயுதத்ததால் குத்திக் கொலைசெய்யப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பில், அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் மேலும் கூறினார்.

மேற்படி பிரதேசத்தில் வசித்து வந்த 20 வயது யுவதியொருவர், ஞாயிற்றுக்கிழமை மாலை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

பலாங்கொடையை பிறப்பிடமாகக் கொண்ட யுவதியே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பாட்டார். மேற்படி யுவதி தொழில் நிமித்தம், அவிசாவளையில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதல் விவகாரமே இக்கொலைக்கு காரணமென, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .