2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாளங்குடாவில் மிதிவெடி மீட்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாலில் மிதிவெடியொன்று, நேற்று (19) மாலை 6.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் தாளங்குடாவில் இம்மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.

தாளங்குடா பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் புற்கள் நிறைந்த காட்டின் நடுப்பகுதியிலேயே, இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புற்கள் வெட்டிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளியொருவர் கொடுத்த தகவலின் பேரிலேயே, பாதுகாப்புத் தரப்பினர் குறித்த மிதிவெடியை மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .