2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆசிரியையை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 20 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

மாணவி ஒருவரின் பணத்தை திருடிய சந்தேகத்தில், ஆசிரியை ஒருவர், மாணவர்கள் அறுவரின் கையில் கற்பூரத்தை கொளுத்தியச் சம்பவமொன்று, பொகவந்தலாவைக்கு உட்பட்ட பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக, மாணவரொருவரின் வலது கையில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேற்படி பாடசாலையில் தரம் 3 இல் கல்விப் பயின்று வரும் மாணவர்களே இவ்விபரீத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து, மாணவர்களின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியையை இடமாற்ற கோரி, பொகவந்தலாவை ரொப்கில் தோட்ட மக்கள், இன்றுக் காலை ஆரப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஹட்டன் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பாடசாலைக்கு விரைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .