2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கழிவை கொட்டினால் நடவடிக்கை’

Niroshini   / 2017 மார்ச் 20 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் குப்பைகளை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தப்பா, இது குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சூழலை பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது அனைவரினதும் கடமையாகும். அந்த கடமையை உதாசீனப்படுத்துவது சமூகத்துக்கு செய்யும் ஒரு துரோகமாகவே கருதப்படும். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை அமுல்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும்.

முறையான வகையில் க​ழிவுளை வெளியேற்றாமல் இருப்பதனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. தற்போது இது ஒரு சமூக பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.

அதனால், முறையான வகையில் குப்பைகளை அகற்றாதவர்களை இனங்கண்டு, பாரபட்சமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .