2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை

George   / 2017 மார்ச் 20 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட பிரதிநிதி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து, வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

15.03.2017 தொடக்கம், வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள்  தொழில் சேவை மத்திய நிலையத்தில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வேலைத்திட்டம், காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெற்று வருகின்றது.

இப்பதிவு நடவடிக்கைகளின் இறுதி திகதி  24.03.2017ஆகும்.   இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத  வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், விரைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X