2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

3,000 பெண் தொழில் முயற்சியாளர்கள் வலுப்படுத்தல்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 23 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் 3,000 பெண் தொழில் முயற்சியாளர்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக  ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் திட்ட உத்தயோகத்தர் பிரியதர்சினி யோகேந்திரன் தெரிவித்தார்.

 'பெண்கள் சக்தி' எனும் தொனிப்பொருளில் பெண் தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகக் கண்காட்சி மட்டக்களப்பு, கல்லடியில் இன்று (23)  நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பெண் தொழில் முயற்சியாளர்களின்; பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எமது  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தின் மூலம் 90 சதவீதமான பெண்களுடன் நாம் வேலை செய்கின்றோம். அனர்த்தங்களின்போது, பெண்கள் எவ்வாறு முகங்கொடுப்பது, எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் அவர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .