2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மார்ச் 12 இயக்கத்தின் பேரணி, அம்பாறையில்

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

தூய அரசியலை வலியுறுத்தும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாரை மாவட்டத்துக்கான விழிப்புணர்வு பேரணி, இன்று (25) அக்கரைப்பற்றை வந்தடைந்தது.
 
அக்கரைப்பற்றிலுள்ள அரச சார்பற்ற இணையத்தின் தலைவர் வி.பரமசிங்கம் தலைமையில் ஜந்து வலயங்களாகப் பிரித்து பெரியநீலாணையில் ஆரம்பமான பேரணி, கல்முனையை சென்றடைந்து அங்கிருந்து காரைதீவுக்குச் சென்று மீண்டும்   காரைதீவிலிருந்து ஒலுவிலுக்கும் ஒலுவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு வந்தடைந்ததுடன், இங்கிருந்து இறக்காமத்தை நோக்கிப் பயணித்து, இறுதியாக அம்பாறையைச் சென்;றடைந்தது.
 
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பி வணிகசிங்க தலைமையில் அம்பாறையில் இடம்பெறவுள்ள இப்பேரணியின் இறுதி நிகழ்வானது அம்பாரை கச்சேரி மண்டபத்தில் இடம்பெறுகின்றது.
 
இதேவேளை, அக்கரைப்பற்றில்  பேரணி தொடர்பான விழிப்பூட்டல் கூட்;டம் நடைபெற்றதுடன், தேர்தல் தொடர்பான விழிப்புட்டல் துண்டப்பிரசுரங்களும் மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.
 
ஏதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் பட்டியல் முறை அடிப்படையில் நடைபெறவுள்ளதால் வட்டாரத்துக்காகத் தெரிவு செய்யப்படும் வேட்பாளருக்கே வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும். அத்தோடு, தகுதியான வேட்பாளர்களை நியமிக்கும் தார்மீக பொறுப்பும் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
மார்ச் 12இயக்கம் குறித்த நோக்கங்களை வெற்றி கொள்வதற்காக நாடாளாவிய ரிதியில் நடாத்தவுள்ள இவ்வேலைத்திட்டத்துக்கு இணையாக மேற்கொள்ளப்பட்ட அம்பாறை மாவட்ட சம்மேளனத்தை வெற்றிகொள்ளும் நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .