2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'சுதந்திரமான ஊடகச் செயற்பாடு அவசியம்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 26 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்

கல்குடாவெம்புப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் எரிசாராய உற்பத்தி நிலையம் தொடர்பில் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து சித்தாண்டியில் இன்று (26) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும்  கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில்,'மேற்படி எரிசாராய உற்பத்தி நிலையத்துக்கான நிர்மாண வேலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், சுதந்திரமான  ஊடகச் செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில்  நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊடகவியலாளர்களைத் தாக்கிய நபர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்' என்றனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .