2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறைச்சாலையில் உள்ள பாதாள கோஷ்டியினருக்கு இடையே மோதல்?

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகசின் சிறைச்சாலையில், உரிய எண்ணிக்கையை விட அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு இடையிலேயே, மோதல் நிலை ஏற்பட கூடிய அபாயம் உள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகசின் சிறைச்சாலையில், தற்போது 10 பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பாதாள உலகக் குழுவினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள், பாதாள உலகக் குழுத் தலைவர்களாகக் கருதப்படும் கெனட், ஆமி சங்க, சூட்டி உக்கு, கழு துஷார ஆகியோர் உள்ளடங்குகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர் சமயங்-இன் ஆதரவாளர்கள் சிலரும், குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகவும் அவர்களின் அவசியத்துக்காகவும், சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்து வரப்படுவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் பாதாள குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கக்கூடிய ஆகக்கூடிய சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, 1,000 ஆகும். ஆனால், தற்போது இவ்வெண்ணிக்கை, 1,400 பேரைக் கடந்துள்ளது.

உரிய எண்ணிக்கையை விட அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால், இவ்வாறு மோதல் ஏற்பட கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .