2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விமான நிலையத்திலிருந்து இரு சடலங்கள் மீட்பு

George   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு யாத்திரைச் சென்று திரும்பிய இரண்டு இலங்கையர்களின் இரண்டு சடலங்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு  மீட்கப்பட்டுள்ளன.

ஹக்மன வீதி, வலசமுல பிர​தேசத்தைச் சேர்ந்த சமரசிங்க டேவிட் (வயது 62) மற்றும் மெல்சிறிபுர பிர​தேசத்தைச் சேரந்த பி.டி.சோமாவதி (வயது 67) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான UL 1196  விமானத்தில் இருந்து நேற்று இரவு 7 மணியளவில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்​னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .