2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யாத்திரைக்குச் சென்றோர் சடலங்களாக திரும்பினர்

Kogilavani   / 2017 மார்ச் 26 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயாவுக்கு யாத்திரிகைக்குச் சென்றிருந்த 3 இலங்கையர், சடலங்களாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.இவர்கள், இம்மாதம் 12ஆம் திகதி, இந்தியாவுக்குச் சென்றிருந்தனர்.  

இதிலொருவர், இம்மாதம் 23ஆம் திகதி, நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், மற்றைய இருவரும், நேற்றைய தினமே, சடலங்களாகக் கொண்டுவரப்பட்டனர்.  

யாத்திரிகைக்காகச் சென்ற போது, அங்கு நிலவிய கடும் குளிர் காரணமாகவே இவர்கள் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள், மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.  

இவர்களின் மரணம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தியது.  

“இந்தியாவுக்கு யாத்திரிகைக்காகச் சென்றிருந்த 3 இலங்கையர், காலமாகியுள்ளனர் என்பதை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்துகிறது. அமைச்சின் உதவியுடன் அவர்களது சடலங்கள், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.  

“சம்பந்தப்பட்ட குடும்பங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் முகமாக, இதுவிடயத்தில் மேலதிக தகவல்களை வழங்க முடியாத நிலையில், அமைச்சுக் காணப்படுகிறது” என்று, அமைச்சின் அறிவிப்புத் தெரிவித்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X