Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
George / 2017 மார்ச் 27 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், மகாண சபை முதலமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு, கூட்டமைப்பின் பலத்துடன் ஆட்சியில் உள்ள மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இரவு 7 மணியளவில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுவுள்ளது.
மேல், தென், மத்திய, சப்ரகமுவை, வடமத்தி, வடமேல் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் வௌியாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .