2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரசாங்கம் பிளவுப்பட்டால் ‘மைத்திரியின் பக்கம் நான்’

George   / 2017 மார்ச் 28 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டால் ஒன்றிணைந்த எதிரணியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் தரப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, தான் யோசனை செய்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

அரசாங்கம் பிளவுப்பட தயாராகியுள்ளதாக அரசாங்கத்தின் ஆலோசகர்கள் தெரிவிப்பதாகவும் வாசுதேவ கூறியுள்ளார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் பிளவுப்பட நேர்ந்தால், பிளவுப்படுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

பொரளை எம்.என்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X