2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

11 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள் காலாவதி

George   / 2017 மார்ச் 28 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான களஞ்சியசாலையில் உள்ள, 11 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து வகைகள், காலாவதி திகதியை அண்மித்துள்ளதாக சுகாதரா அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.   

பல்வேறு வகைகளைச் சேர்ந்த மருந்துகள் இவ்வாறு காலவதியாகியுள்ளதாகவும், அவை காலவதி திகதியை அண்மித்துள்ளமை தொடர்பில், தொடர்ந்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.   

53 மருந்து வகைகள் மார்ச், ஏப்ரல், மே, ஜுன், ஜுலை மற்றும் செப்டெம்பர் மாதங்களில் காலாவதியடையும் என, கணக்கெடுக்கப்பட்டுள்னதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.   

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முறையற்ற முகாமைத்துவம் காரணமாக, இவ்வாறான பல கோடி ரூபாய் பெறுமதியாக மருந்துகள் நாசமடைய நேரிட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X