2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 10

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1815: இந்தோனேஷியாவின் தாம்போரா எரிமலை வெடிப்பினால் சுமார் 71,000 பேர் பலி. இவர்களில் 11,000 பேர் நேரடியாகவும் ஏனையோர் பஞ்சம் மற்றும் நோய்களினால் இறந்தனர்.

1912: டைட்டானிக் கப்பல், இங்கிலாந்தின் சௌதம்டன் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

1963: அமெரிக்க நீர்மூழ்கியொன்று கடலில் மூழ்கியதால் 129 பேர் இறந்தனர்.

1972: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 5,200 பேர் பலியாகினர்.

1998: 30 வருட கால வட அயர்லாந்து மோதலை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக பெரிய வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

1972: உயிரியல் ஆயுத தடுப்பு உடன்பாட்டில் 74 நாடுகள் கையெழுத்திட்டன.

1979: டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42பேர் பலியாகினர்.

1984: ஈழப்போர் - பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1985: ஈழப்போர் - யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1991: இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல், லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140பேர் உயிரிழந்தனர்.

1992: லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம், ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.

1998: அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.

2002: விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டார்.

2006: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60பேர் உயிரிழந்தனர்.

2010: போலந்து விமானப்படை விமானம் ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த போலந்து ஜனாதிபதி லேச் கஸின்ஸிக் உட்பட 96 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .