Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கல்வியூட்டல் தங்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றது என்கின்ற ஓர் எண்ணம் ஏற்படுவதாலேயே இளம் சிறார்கள், கல்வியில் நாட்டம் இல்லாமலும் வெறுப்பான மனநிலைக்கும் உள்ளாகின்றார்கள்.
இளம் மாணவர்கள் உரிய முறையில் கல்வி பயிலாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. வீட்டில் வறுமை நிலை, தாய் தகப்பனாரின் அசமந்த குணம், சதா வீட்டில் சண்டை சச்சரவுகள், குடும்பத் தலைவனின் மதுப்பழக்கம் எனப் பல காரணங்களினால் பிள்ளைகளின் கல்வி மீதான ஆர்வம் தடைப்படுகின்றது.
கல்விகற்றல் என்றால் பாடசாலையில் தண்டனை வழங்கும் நிகழ்வு எனப் பிள்ளைகள் கருதும் நிலை ஏற்படலாகாது. கல்வி கற்பிக்கும் விடயத்தில் பிள்ளைகளுக்கு தண்டனைகள் வழங்குதலாகாது. நவீன கல்விச் சிந்தனைகள் தண்டனை வழங்கும் முறையைக் கடைப்பிடித்தலாகாது என்று வலியுறுத்துகின்றன.
கல்வி கற்கும்போது அவர்களின் மனஇயல்பு பாதிக்காத வகையில் நடந்து கொள்ளல் வேண்டும். கல்வி கற்றல் ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு என்ற உணர்வையூட்டுக.
வாழ்வியல் தரிசனம் 17/04/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .