2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவச் சிற்பங்களை அற்புதமாக வடிவமைக்க வேண்டும்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களுக்கு உள்ள பல பிரச்சினைகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களால் தரப்படும் வீட்டுவேலைகளை (பாடம் சம்பந்தமானது)மாணவர்கள் செய்யாது விடின், உடனே ஆசிரியர்கள் அவர்கள் மனம் போனபடி, திட்டித் தீர்த்தலாகாது.

தங்கள் வீட்டுப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சின்னஞ் சிறுவர்கள் சொல்லத் தெரியாவிட்டாலும் கூட அதனை உணர்ந்து மனவேதனைப் படலாம்.

வீட்டுச் சூழல் மாணவர்களைப் பெரிதும் பாதிப்படைய வைக்கின்றது. 

மேலும், தற்போது பாடசாலையில் பயிலும் மாணவர்கள் தீயவர்களுடன் வெளியே பழகுவதால், எல்லை மீறிய தீய காரியங்களில் ஈடுபடுவதை அறிகின்றோம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாகப் பிறர் கூறுவதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவச் சிற்பங்களை அற்புதமாக வடிவமைத்தல் பெற்றோர், ஆசிரியர்களின் சிந்தையில் தங்கியுள்ளது. 

வாழ்வியல் தரிசனம் 18/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .