2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெளிநாட்டு மதுபானங்களுடன் மூவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில், வெளிநாட்டு மதுபான போத்தல் 182 உடன் 3 நபர்கள், புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கடற்படையினர் மற்றும் ​ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனத்தின் ஊடாக இந்த மதுபான போத்தல்களைக் கொண்டுச்சென்ற போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

​கைதுசெய்யப்பட்ட நபர்களையும் மோட்டார் வாகனம், மதுபானப் போத்தல் என்பவற்றையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X