2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனிவீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிவீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளையும் நாளை மறுதினமும் கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள சில தோட்டங்களில் நடைபெறவுள்ளது.

இதற்காமைவாக கேகாலை மாவட்டத்தில்  திவுறும்பிடிய வேளாங்கல தோட்டத்தில் 32 வீடுகளும் டெனிஸ்வத்தையில்  48 வீடுகளும் மற்றும் தனடின் தோட்டத்தில் 19 வீடுகளுமாக, மொத்தம் 99 வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கான டிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை இடம்பெறவுள்ளது.

இதேவெளை, நுவரெலியா மாவட்டத்தில்  மவுண்ட்வேர்ணன், போகாவத்த, திம்புள்ள, கிரேட் வெஸ்டர்ன், சென் கூம்ஸ் ஆகிய தோட்டங்களில் மொத்தமாக 185 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் பா.திகம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .