2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகை; எதிர்த்து யோசனை

Kogilavani   / 2017 ஏப்ரல் 23 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை செய்யும் ஏற்றுமதிகளுக்கு ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகை வழங்குவதை எதிர்த்து, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் யோசனை​ ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.   

28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திடமே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.   

மனித உரிமை போன்ற முக்கிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதாகவும், இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்த செயன்முறை போதுமானதாக இல்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதனால், அந்த சலுகையை வழங்குவதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும், அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த தீர்மானத்துக்கு அங்கிகாரம் கிடைத்தால், ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகை, இலங்கைக்கு கிடைக்காமல் போகும். ஜீ.எஸ்.பீ பிளஸ், இலங்கைக்கு கிடைத்தால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் ஏற்றுமதி அதிகரித்து வெளிநாட்டு செலவாணியின் கையிருப்பும் அதிகரிக்கும். 

“தண்டனை வழங்காமை எனும் பழக்கத்தை இலங்கை இன்னும் சரியாக கையாளவில்லை. மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு இலங்கை அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியுள்ளது.  

நிறுத்தப்பட்ட ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகையை பெற இலங்கை மும்முரமாக உள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையினால் (UNHRC) தீர்மானத்தை முழுதாக அமுலாக்க இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,   

“பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இல்லாமற் செய்யப்படவில்லை. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் சர்வதேச சமவாயங்கள் தொடர்பாக இலங்கையில் குறைபாடு உள்ளது” என்றும், அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இதேவேளை, இந்த யோசனை தொடர்பில், ஏப்ரல் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு, இது தொடர்பான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.   

இதற்கமைய, 751 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 376 வாக்குகளை பெற்றால் குறித்த யோசனை நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும், இந்த யோசனை வெற்றி பெறும் பட்சத்தில் அது ஐரோப்பிய சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X