2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சங்குகளுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், கற்பிட்டி களப்புக்கு ஓரமாகவுள்ள வீதியில் முச்சக்கரவண்டியொன்றில் 204  இனச் சங்குகளைக் கொண்டு சென்ற  நபரொருவரை, நேற்றுக் கைதுசெய்துள்ளதாக, கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடி மற்றும் நீர்வன சட்டத்தில் சங்குகளை வைத்திருத்தல், கொண்டு செல்லல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளதாகக் கற்பிட்டிப் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

மோசடிக்காரர்கள், சங்குகளை இந்தியாவுக்குக் கடத்திச் செல்வதுடன்,  அங்கு இவை அலங்காரப் பொருட்கள் செய்யப்பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அலங்காரப் பொருட்களுக்கு, தாய்லாந்து, மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உயர் கேள்வியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .