2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் படிவங்கள் கையளிக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் படிவங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கும் நடவடிக்கை, மாவட்டத் தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் இன்று (24)  முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் படிவங்கள் முதன்முதலில் காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கிராம உத்தியோகத்தர்கள் இந்தப் படிவங்களைப் பெற்றுக்கொண்டு,  வீடு, வீடாகச்  சென்று வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர் என மாவட்டத் தேர்தல் திணைக்கள அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்தப் பதிவு நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த  அவர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம்வரை முன்னெடுக்கப்படும் எனவும் கூறினார்.

18 வயதைப் பூர்த்தி செய்த சகலரும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படுவதுடன், 31.5.1999ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த சகலரும் இந்த வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யும் நடவடிக்கைக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X