2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொக்கிளாய் மீனவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம் தொடர்பிலான வழக்கு, மே மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை விடுவிதற்குரிய இடம் (பாடுகள்), கரைதுரைப்பற்று பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலையில், குறித்த பிரதேசம் தமது பயன்பாட்டுக்குரிய பிரதேசதம் என தெரிவித்து?  நீரியல்வளத்திணைக்களத்தால் கடந்த வருடம் ஜுலை மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட நிலையில், வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் நீதவான் எஸ் எம் எஸ் சம்சுதீன் முன்னிலையில்  வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மே மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .