Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 24 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
வீரமுனை பிரதான வீதியில் மாடு அறுத்த கழிவுகளைக் கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு தலா 7 ஆயிரம் ரூபாயை அபராதமாக சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எல்.நஸீல், விதித்துள்ளார்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, கடந்த 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இரு நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கு விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (24) நடைபெற்றபோதே, நீதவான் இவர்களுக்கு அபராதம் விதித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .